வவுனியா சிறைக் கைதி ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு.

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று மாலை மரணமடைந்துள்ளார்.

குற்றச் செயல் ஒன்று தொடர்பில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் மேற்படி கைதிக்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாகவே மரணம் இடம்பெற்றுள்ளது என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ஜா – எல பகுதியைச் சேர்ந்த 34 வயது இளைஞரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலசாஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.