ரணிலுக்கு ஆதரவான மொட்டு பெரும்பான்மையை காட்டுமாறு ரஞ்சித் பண்டார, பிரசன்னாவுக்கு சவால்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொஹொட்டுவவில் பெரும்பான்மையானோர் ஆதரவு வழங்குவதாக கருத்து வெளியிடும் பிரசன்ன ரணதுங்கவிற்கு, முடிந்தால் பெரும்பான்மை குழுவை அழைத்து வந்து காட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார சவால் விடுத்தார்.

பிரசன்ன ரணதுங்க கூறுவது கட்சியின் கருத்து அல்ல என்றும் அது அவரது கருத்து என்றும் அவர் வலியுறுத்தினார். பொது இணக்கப்பாடு எட்டப்படும் வரை கட்சியின் வேட்பாளர் தொடர்பில் அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்பதே கட்சியின் உள் தீர்மானம் என்பதை சிரேஷ்ட உறுப்பினர் என்ற வகையில் பிரசன்ன ரணதுங்க அறிந்து கொள்ள வேண்டும் எனவும் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.

மொட்டுவிலிருந்து வேட்பாளர் ஒருவர் நிச்சயம் முன்வைக்கப்படுவார் என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார, அந்த வேட்பாளர் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் அவர் கூறினார்

Leave A Reply

Your email address will not be published.