இன்னும் 7 நாள்களுக்கு மட்டும் அனுமதியுங்க – அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை!

ஜாமீனை நீட்டிக்க கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இடைக்கால ஜாமீன் பெற்றார்.

அதன்படி, வரும் ஜூன் 1ம் தேதி கோர்ட்டில் ஆஜராகி மீண்டும் சிறைக்குள் செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில் தான் ஜூன் 4 ம்தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் தனது இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என அர்விந்த் கேஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

பிஇடி-சிடி ஸ்கேன் மற்றும் பிற மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு கோரப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.