மலாவி துணை அதிபரோடு சென்றோரை பலிகொண்ட விமான விபத்து!

மலாவியின் துணை ஜனாதிபதி சௌலோஸ் சிலிமா மற்றும் அவரது மனைவி உட்பட 9 பேரை ஏற்றிச் சென்ற விமானம் நேற்று (10) சிகங்காவா மலைத்தொடருக்கு அருகில் விபத்துக்குள்ளானதாக மலாவி அரசாங்கம் இன்று (11) அறிக்கை வெளியிட்டுள்ளது. விபத்தில் இறந்துள்ளனர்.

மலாவியின் ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா இன்று செவ்வாய்க்கிழமை தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு மலாவிய மலைப்பகுதியில் உள்ள காடுகள் நிறைந்த பகுதியில் ஒரு நாளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் முயற்சிகளின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டதாக நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை இன்று காலை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.