விதையனைத்தும் விருட்சமே அமைப்பினரின் 9வது இரத்ததான முகாம்.

விதையனைத்தும் விருட்சமே அமைப்பினரின்
விடாமுயற்சியால் 53 பேருடன் நிறைவடைந்தது 9வது இரத்ததானமுகாம்
இன்று யாழ்ப்பாணம் இரத்த வங்கியில் நடாத்தப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம்மில் 53 குருதிக் கொடையாளர்களுடன் நிறைவு பெற்றது.
தற்போது யாழ்ப்பாண இரத்தவங்கியில் ஏற்பட்ட குருதித்தட்டுப்பாடு என்ற சூழ்நிலையை கருத்திற்கொண்டு இரத்ததான முகாம்கள் நடாத்தப்பட்டுவருகின்றது.
அந்த வகையில் நாவற்குழி கீரிமலை (கூவில்) கொக்குவில் இந்துக் கல்லூரி புத்தூர் கந்தரோடை ஆகிய இடங்களில் நடாத்திவைக்கப்பட்டது.
தற்கால சூழ்நிலையால் இன்று யாழ்ப்பாணம் இரத்த வங்கியில் நடாத்தப்பட்டது.
இன்று விசேடமாக கைகோர்த்த யாழ் நகர றொட்டறிக் கழகத்திற்கு விதையனைத்தும் விருட்சமே  குழுமம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.
இது மட்டுமல்லாமல் இன்றைய சிற்றூண்டிச் செலவுகளை பொறுப்பேற்றுக்கொண்ட  செயற்திட்ட உறுப்பினர் அம்பிகைபாகன் கேதுசன் அவர்களுக்கும்
இம் இரத்ததான முகாம்மினை சிறப்பாக நாடாத்தி முடிக்க உறுதுணையாக இருந்த அனைத்த இளைஞர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த அமைப்பின் சக நண்பர்களுக்கும் குருதிக்கொடையாளர்களுக்கும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர் தாதிய உத்தியோகத்தர்கள் மருத்துவ உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் விதையனைத்தும் விருட்சமே தங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்கள்

Leave A Reply

Your email address will not be published.