அம்பாறை அக்கரைப்பற்றில் ஆயுதங்கள் மீட்பு….

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஒருதொகை ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சாம்பல் திடல் வீதியில் உள்ள தனியார் காணியிலுள்ள கிணறு ஒன்றிற்குள் மறைத்துவைக்கப்பட்ட ஆயுதங்கள் இன்று (19) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வு தகவல் திணைக்கள பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பற்ற தகவலையடுத்து T-81 வகை துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள், ஒரு ரவைக்கூடு ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.