வவுனியா நெடுங்கேணியில் மேலும் இருவருக்கு கொரணா.

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கடந்த செவ்வாய் கிழமை பிசீஆர் பரிசோதனை மேற்கொண்டவர்களில் 25 பேரின் முடிவுகள் நேற்று (21.10) வெளியாகியிருந்தன. அதில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேலும் இருவரின் பிசீஆர் முடிவுகள் இன்று (22.10) மதியம் வெளியாகின. அதில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.