வட இலங்கை சங்கீத சபையின் பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

வட இலங்கை சங்கீத சபையின் பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டன

வட இலங்கை சங்கீத சபையின் பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் எஸ்.சந்திரராஜ் தெரிவித்துள்ளார்.

வட இலங்கை சங்கீத சபையினால் நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 7 ஆம் திகதி மற்றும் 8 ஆம் திகதி சகல மட்டங்களுக்குமான எழுத்துப் பரீட்சைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், கொவிட் -19 பரவல் காரணமாக நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு வட இலங்கை சங்கீத சபையின் பரீட்சைகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுகின்றது.

பரீட்சைக்குரிய திகதிகள் பின்னர் பரீட்சார்த்திகளுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.