இரு மாவட்டங்களில் மண் சரிவு அபாயம்!

இரு மாவட்டங்களில் மண் சரிவு அபாயம்!

கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் காணப்படுகின்றது எனத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மஞ்சள் விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய கேகாலை மாவட்டத்தில் ருவண்வெல்ல பிரதேச செயலகப் பிரிவில் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, எலப்பான, இரத்தினபுரி மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண் சரிவு அபாயம் காணப்படுகின்றது என அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.