நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவுசரில் மோதி கோர விபத்து. இருவர் பலி.

விபத்தில் பெண் பலி

இன்று நண்பகல் 12 மணியளவில்
யாழ்ப்பாணம் தென்மராட்சி நுணாவில் சந்திக்கு அண்மையில் ரயர் கடைக்கு முன்பாக ரயர் திருத்த வேலைக்காக நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனம் ஒன்றின் மீது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய திசையில் பயணித்த
WP என்ற பதிவிலக்கமுடைய CAE 8062 இலக்கமுடைய கார் ஒன்று மோதியதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் பெண் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றபோதிலும் அவர்கள் குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

Leave A Reply

Your email address will not be published.