வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழை தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்.

வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழை தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையை எதிர்கொள்வது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று(09) காலை 10.00 மணிக்கு உதவிப் பிரதேச செயலாளர் ரி.ரமேஷ் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலானது கடந்த 03ம் திகதியன்று திட்டமிடப்பட்ட போதிலும் அண்மையில் ஏற்பட்ட புரேவி புயல் காரணமாக பிற்போடப்பட்டு இன்று இடம்பெற்றுள்ளது.

புரேவி புயல் காரணமாக குறித்த பிரதேச செயலர் பிரிவில் பாதிக்கப்பட்ட இடங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகள் தொடர்பான ஆராயப்பட்டுள்ளது.

மேலும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையினால் உண்டாகும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் முறைகள் மற்றும் அவற்றை குறைப்பதற்கான திட்டமிடல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினருடன் ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக இத்தகைய அனர்த்த காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், நீர்ப்பாசன திணைக்கள பொறியாளர், 64வது படைப்பிரிவின் இராணுவ அதிகாரி, பல்வேறு திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலைய உயரதிகாரிகள், கிராம சேவகர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.