காலி மாவட்டத்தில் 7 கிராமங்களுக்கு கடுமையான பயணத்தடை விதிக்க நடவடிக்கை.

காலி மாவட்டத்தில் 7 கிராமங்களுக்கு கடுமையான பயணத்தடை விதிக்க சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

25 கொவிட் தொற்றாளர்கள் குறித்த பகுதிகளில் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக காலி மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் வெனுர கே. சிங்காரச்சி தெரிவித்தார்.

அதன்படி, மிலித்துவ, கோன்கஹ, தலாபிடிய, தங்கெதர கிழக்கு, தெத்தூகொட வடக்கு, தெத்தூகொட தெற்கு மற்றும் மகுலுவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேசங்களை சேர்ந்த எந்தவொரு நபரும் மறு அறிவித்தல் வரை அத்தியாவசியமற்ற காரணத்திற்காக வீட்டில் இருந்து வௌியேற முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.