வவுனியா சாலம்பைக்குளம் கிராமம் முடக்கம்.அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில்!

வவுனியா சாலம்பைக்குளம் கிராமம் முடக்கம்.அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில்!

வவுனியா புதிய சாலம்பைக்குளம் கிராமம் இன்றிலிருந்து 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தைச் சேர்ந்த தாயும் பிள்ளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிருந்து கொழும்பு சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவு நேற்று வெளியாகிய நிலையில் தாய்க்கும் பிள்ளைக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு கொரோனாத் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றும் முகமாக புதிய சாலம்பைக்குளம் கிராமம் இன்று சுகாதாரப் பிரிவினரால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட அக்கிராமத்தைச் சேர்ந்த 40 இற்கும் மேற்பட்ட மக்களிடம் சுகாதாரப் பிரிவினர் இன்று பி.சி.ஆர். பரிசோதனையும் மேற்கொண்டனர்.

புதிய சாலம்பைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதுடைய தாயும் அவரது 5 வயதுடைய மகளுமே இவ்வாறு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களாவர்கள். அவர்களை தொற்று சிகிச்சை நிலையத்துக்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கையை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.