“நிறைவான கிராமம் “வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு.

“நிறைவான கிராமம் ” வேலைத் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தின் தென்மராட்சி பிரதேசத்தில் நான்கு வீதிகளுக்கான அடிக்கல் சனிக்கிழமை நாட்டி வைக்கப்பட்டது.

அடிக்கல்லினை யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான  அங்கஜன் இராமநாதன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நாட்டி வைத்தார்.

நாவற்குழி கிழக்கு பூதவராயர் வீதி,கைதடி கிழக்கு தொத்தாகூடல் வீதி,அல்லாரை அறுகம்புலப் பிள்ளையார் வீதி மற்றும் கச்சாய் கண்ணகை அம்மன் ஆலய வீதி ஆகிய அதிக தேவைப்பாடு உடைய வீதிகளே இவ்வாறு நிறைவான கிராமம் திட்டத்தின் கீழ் அமையப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.