மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களை அன்டிஜன் பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களை அன்டிஜன் பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை. இராணுவத் தளபதி தெரிவிப்பு.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் இருந்து வெளி இடங்களுக்குச் செல்வோரை ‘ரெப்பிட் அன்டிஜன்’ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என  இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் நிலைமை தொடரும் காரணத்தாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகைக் காலத்தில் மேல் மாகாணத்தில் இருந்து செல்வோர் ஊடாக வெளிமாகாணங்களிலும் தொற்றுப் பரவக் கூடும் எனவும், இதனால் அவர்களை அன்டிஜன் பரிசோதனைகளை உட்படுத்தும் வகையில் நடமாடும் பரிசோதனை வாகனங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக பஸ்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளில் பயணிப்பவர்களிடம் இந்தப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தக் காலப்பகுதியில் மக்கள் சுகாதார ஒழுங்கு விதிகளைப் பின்பற்றி நடந்துகொள்வர்களாக இருந்தால் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்த வேண்டிய தேவை இருக்காது எனவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.