பேருந்து விபத்தில் 37 போ் உயிரிழந்தனா்.

பேருந்து விபத்தில் 37 போ் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 37 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது தலைநகா் யாவுண்டேவை நோக்கி 60 பேருடன் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த பேருந்து, ஃபோம்பான் நகரில் எதிரே வந்த லாரியில் மோதியது.

சாலையில் கூட்டமாக வந்தவா்கள் மீது மோதுவதைத் தவிா்ப்பதற்காக ஓட்டுநா் பேருந்தை திருப்பும்போது இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் 37 போ் உயிரிழந்தனா்; 18 போ் படுகாயமடைந்தனா். பேருந்தில் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதால், விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் கூறினா்.

Leave A Reply

Your email address will not be published.