பூநகரி பகுதியில் கணவனால் மனைவி கோரமாக வெட்டி படுகொலை.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி பொலிஸ் நிலையப் பிரிவிற்குட்பட்ட தெளிகரை என்ற கிராமத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான வாய்த்தகராறு காரணமாக கணவனால் மனைவி மிகவும் கொடுரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பூநகரி பொலிஸ் நிலையப் பொலிசார் கணவனைக் கைது செய்துள்ளதுடன் சடலத்தை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.