கழிவு தேயிலைத் தூளை விற்பனை செய்த களஞ்சியசாலை முற்றுகை.

மட்டக்களப்பு காத்தான்குடியில் கழிவு தேயிலைத் தூளை பொதி செய்து விற்பனை செய்து வந்த தொழிற்சாலை மற்றும் களஞ்சியசாலையை விசேட அதிரடிப்படையினர் (17) முற்றுகையிட்டு பல இலட்சக் கணக்கான பெறுமதி மிக்க கழிவு தேயிலைத் தூளை கைப்பற்றியுள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள தேயிலைத் தூள் விற்பனை செய்து வந்த வர்த்தக நிலையத்துக்குச் சென்ற விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, களுஞ்சியசாலையில் சுமார் 60 கிலோ கிராம் கொண்ட கழிவு தேயிலையை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றினர்.

Leave A Reply

Your email address will not be published.