நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வி

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக வேட்பாளர் கே.பி.சங்கரிடம் 39588 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றுள்ளார்.

 

தமிழகத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட முடிவுகள் வரும் தருவாயில் உள்ளது. இதைத்தொடர்ந்து, திமுக 159 தொகுதிகளிலும் அதிமுக 75 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இவற்றில் சில தொகுதிகளில் வெற்றி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக வேட்பாளர் கே.பி.சங்கரிடம் 39588 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றுள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை என்றாலும் கணிசமான வாக்குகள் பெற்று கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.