திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் 11 பேருக்கு கொரோனா!

அம்பாரை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிசாரில் தற்போது வரை 11பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அந்தவகையில் (செவ்வாய்க்கிழமை) திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 38 பொலிஸாருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பரிசோதனை முடிவிலேயே 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பொலிஸாரை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது .

திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா மூன்றாவது அலையில் நேற்றுவரை 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் திருக்கோவில் சுகாதார பிரிவில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பி.மோகனகாந்தன் தலைமையில் பொது சுகாதார உத்தியோகத்தர்களால் தற்போது பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.