என் காலடி பட்டால் தான் இந்தியாவில் கொரோனா ஒழியும்! நித்தியானந்தாவின் அடுத்த பரபரப்பு

பாலியல் புகார் குற்றச்சாட்டில் சிக்கி நாட்டை விட்டு தப்பிச்சென்றவர் சாமியார் நித்யானந்தா. இவர் கைலாசா என்ற ஒரு தனித்தீவை வாங்கி அங்கிருந்து வீடியோகளை பதிவிட்டு வருதாக சொல்லிக்கொள்கிறார்.

இருப்பினும் அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து காவல்துறையினர் அறிந்தபாடில்லை. இதையடுத்து, அடிக்கடி ஏதாவது ஒரு வீடியோவை வெளியிட்டு பேசி சர்ச்சை கிளப்பி வந்தவர்,.

தற்போது கொரோனா குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா இந்தியாவுக்குள் வரக்கூடாது என்பதற்காக 2020 ஆம் ஆண்டு பாரதம் முழுவதும் 12 ஜோதிட லிங்கத்தை பாத யாத்திரை செய்ய என் மகன் மூலம் திட்டமிட்டிருந்தேன்.

படுபாவிகள் ஓடத்தின் மாலுமியை ஊரைவிட்டு துரத்தினார்கள். இப்போது என்ன நடக்கிறது பாருங்கள். கொரோனா நாட்டிற்குள் நுழைய என்னை நாட்டை விட்டு விரட்டியதே காரணம்.

கைலாசா நாட்டின் தலைவனாக நன் மதிப்போடு இருக்கிறேன். தன் காலடி இந்தியாவில் பட்டால் தான் நாட்டை விட்டு கொரோனா போகும் எனக் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.