தூத்துக்குடியில் பெண்னை வரதட்சனை கேட்டு தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவர் உட்பட 3 பேர் 16 மணி நேரத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு ஈச்சாந்தா ஓடை பகுதியை சேர்ந்த லெட்சுமணன் மகன் விக்னேஷ் (27) என்பவரும் காசிலிங்கபுரம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகள் சண்முகசெல்வி (25) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு கமலேஷ் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சண்முக செல்வி மற்றும் அவரது மகன் கமலேஷ் ஆகிய இருவரும் வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

அப்போது சண்முகச் செல்வியின் தந்தை செல்லத்துரை (58) என்பவர் தன் மகளை, மகளின் கணவரான விக்னேஷ் (27), அவரது அம்மா மல்லிகா (52), அப்பா லெட்சுமணன் (60) மற்றும் அவரது அண்ணன் சுரேஷ் (28) ஆகியோர் வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடுமைபடுத்தி வந்ததாகவும், அதனால் தன் மகள் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

அவரது புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகச்செல்வி மற்றும் அவரது மகன் கமலேஷ் ஆகியோரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

தனிப்படை போலீசார் தற்கொலை செய்து கொண்ட சண்முகசெல்வியின் கணவரான விக்னேஷ், அவரது சகோதரர் சுரேஷ் மற்றும் அவரது அம்மா மல்லிகா ஆகியோரை கைது செய்தனர்.

பெண்ணை வரதட்சணை கேட்டு தற்கொலைக்கு தூண்டிய அவரது கணவர், கணவரின் சகோதரர் மற்றும் கணவரின் தாயாரை 16 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.