தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2,400 பேருக்கு கொரோனா பாதிப்பு: 49 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2வது அலை பரவத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மே மாதத்தில் இது உச்சமடைந்தது. தற்போது இந்த பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,45,663 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 2,405 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 25,28,806 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 3,006 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரையில், 24,65,250 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று 29,950 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதித்து இன்று மட்டும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 33,606 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கோயம்புத்தூரில் 256 பேருக்கும், சென்னையில் 148 பேருக்கும், ஈரோட்டில் 159 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.