நாளாந்த கொரோனா மரணம் மேலும் உச்சமடையும்! – விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை.

இலங்கையில் நாளாந்த கொரோனா மரணங்கள் மேலும் உச்சமடையும் என்று விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இறுதியாக பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இந்த ஆபத்து நிலையை எடுத்துக் காட்டுகின்றது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விசேட வைத்திய நிபுணர்களின் இந்த எச்சரிக்கையைக் கவனத்தில் கொண்டுள்ளோம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

தொற்றாளர்களின் வீதம் அதிகரிப்பதால் மரணங்களும் உயர்வடைகின்றன என்றும் அவர் கூறினார்.

இந்த ஆபத்தான நிலையை எதிர்கொள்ள அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் நேற்றுமுன்தினம் 74 கொரோனாத் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 48 ஆண்களும், 26 பெண்களும் அடங்குகின்றனர்.

இதற்கமைய நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது என்றும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.