சினோபாம் முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி…..

மன்னார் மாவட்டத்தில் கடந்த யூலை மாதம் சினோபாம் முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு திங்கட்கிழமை(9) முதல் 2வது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம்,6 ஆம்,7 ஆம் திகதிகளில் சினோபாம் முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கான 2 ஆவது தடுப்பூசி மன்னார் பிராந்திய சேவைகள் பணிமனை,மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து திங்கட்கிழமை முதல் வழங்கி வருகின்றனர்.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் தடுப்பீசி செலுத்தும் நடவடிகை இடம் பெற்று வருவதுடன் பேசாலை சென் மேரிஸ் கல்லூரியிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது.

எருக்கலம்பிட்டி பிரதேச வைத்தியசாலை,மற்றும் தலைமன்னார் றோமன் கத்தோலிக்க பாடசாலை ஆகியவற்றில் சினோபாம் கொரோனா தடுப்பூசியின் 2வது தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.