திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் கொவிட் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் கொவிட் சிகிச்சை நிலையம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இவ் நிகழ்வானது திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.வி.மர்சூத் தலைமையில் இன்று வியாழக்கிழமை (12) இடம்பெற்று இருந்ததுடன் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனினால் திறந்து வைக்கப்பட்டு இருந்தன.

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகரின் அர்ப்பணிப்பான சேவையின் ஊடாக பிரதேச மக்களின் சுகாதார தேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் பல அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்றுவருவதுடன் இதற்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன் ஆக்கபூர்வமான பங்களிப்புக்களையும் வழங்கி வருகின்றார்.

அந்தவகையில் திருக்கோவில் பிரதேச கொவிட் தொற்றாளர்களை இப்பிரதேசத்தில் வைத்தே சிகிச்வை வழங்கும் நோக்குடன் இவ் கிசிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் ஏ.வி.மர்சூத் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தன் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அபிவிருத்திக் குழு நிருவாகிகள் என பலரும் கலந்த கொண்டு இருந்தனர்.

Sathasivam Nirojan

 

Leave A Reply

Your email address will not be published.