யாழில் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்ற 21 பேருக்குக் கொரோனா!

யாழ்., நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் எம். எஸ். லேன் பகுதியில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட 21 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற இந்த விழாவில் பங்கேற்ற சிலருக்குக் கொரோனாத் தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அதில் கலந்துகொண்ட 58 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களிலேயே 21 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்று பரவலையடுத்து ஒன்றுகூடல்களைத் தவிர்க்கும் வகையில் அரசு விடுத்துள்ள அறிவுறுத்தல்களையும் மீறி இடம்பெற்ற குறித்த பூப்புனித நீராட்டு விழாவில் அளவுக்கதிகமானாவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.