கொரானா நோயாளியான மனைவியை கொலை செய்துவிட்டு வேறொரு திருமணத்துக்கு தயாரான தொழிலதிபர் போலீசில் சிக்கிக் கொண்டார்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு , மற்றொரு பெண்ணை திருமணம் செய்யத் தயாராக இருந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த மனைவியின் சொத்துக்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் தொழிலதிபர் வேறொரு திருமணத்தை நடத்தத் தயாராகியிருந்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அவரது மனைவியின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பாதி எரிந்த தலையணை மற்றும் பெட் சீட் ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இத் தம்பதிக்கு 13 மற்றும் 6 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கொரோனா தொற்றினால் இறந்ததாக கருதப்பட்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் , அவரது மூக்கு மற்றும் வாய் பகுதி, கடும் வெளி அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால்தான் மரணம் சம்பவித்துள்ளது என தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, இறந்த பெண்ணின் கணவரை பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு வரவழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரித்த போது, கொலை தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மனைவி இறப்பதற்கு முன்பு மரண சடங்குகளை ஒழுங்கு செய்யும் நிறுவனமொன்றுக்கு , இறுதி சடங்கை நடத்த பணம் கூட கொடுக்கப்பட்டிருந்தமை போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.