மின்னல் தாக்கி விவசாயி பரிதாப மரணம்!

அம்பாறை மாவட்டம், திருக்கோயில், சாகாமம் பகுதியில் மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சாகாமத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து மோகனராசா (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது மகனின் வயலில் வரம்பு கட்டிக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளார்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.