முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு ஊக்கி தடுப்பூசியேற்ற உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம்….

கொரோனா தொற்று ஒழிப்பிற்கான ஊக்கி (Booster Shot) தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தனது பரிந்துரையை வழங்கியுள்ளது.

65 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு ஊக்கி தடுப்பூசியை ஏற்ற, உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அதற்கமைய, ஊக்கி தடுப்பூசியை ஏற்றுவதற்கு தயாராகி வருவதாக சுகாதார அமைச்சர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.