பொருள்கள் விலைகள் மேலும் அதிகரிக்குமாம்! அமைச்சர் ஜோன்ஸ்டன்.

“பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும். கடினமான விடயமாக இருந்தாலும் அதனைச் செய்தாக வேண்டிய நிலைமையே உள்ளது.”

– இவ்வாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“கொரோனாப் பெருந்தொற்று நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் வரும்வரை, இந்நிலைமைக்கு நாம் முகங்கொடுத்தாக வேண்டும்.

உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதை நாமும் விரும்பவில்லை.

அனைவருக்கும் இதனால் பாதிப்பு. விருப்பம் இல்லாவிட்டால்கூட அதிகரிப்பைச் செய்தாக வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.