பிரித்தானிய ராணியின் அரண்மனைக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞன்!

பிரிட்டனில் எலிசபெத் ராணியின் அரண்மனைக்குள் அத்துமீறி நுழைந்ததாக நம்பப்படும் ஆடவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்படி ,அவர் அம்பு ஒன்றை ஏந்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.

எலிசபெத் ராணி கிறிஸ்மஸ் பண்டிகைக்காக விண்ட்சோர் அரண்மனையில் இருந்தபோது அந்தச் சம்பவம் நடந்தது.

மேலும் ,பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் அத்துமீறி நுழைந்தது, ஆயுதம் வைத்திருந்தது ஆகிய சந்தேகத்தின் பேரில் அந்த 19 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அந்த ஆடவர் அரண்மனை வளாகத்திற்குள் நுழைந்தவுடன் அத்துமீறல் கண்டறியப்பட்டதாகவும் அவர் எந்தக் கட்டடத்திலும் நுழையவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.