தமிழகத்தில் கட்டாயம் கொரோனா அதிகரிக்கும்! முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டாயமாக அதிகரிக்கும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்த நிலையில் நாடு முழுவதும் இன்று காலை முதல் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி தமிழகத்தில் சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள மேல்நிலை பள்ளியில் சிறார் தடுப்பூசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய முதல்வர், தமிழகத்தில் கொரோனா நோய் தாக்கம் நிச்சயம் அதிகரிக்கும். ஆனால் அதை தடுக்கும் முக்கிய கேடயமாக முகக்கவசம் உள்ளது. நீங்கள் அச்சப்பட வேண்டும் என்ற நோக்கில் இதை கூறவில்லை.

மாறாக,அனைவரும் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்பதற்காகவே அறிவுறுத்துகிறேன். மேலும் ஒமிக்ரான் என்ற புதிய தொற்று புதிய அச்சுறுத்தலோடு நம்மை மிரட்டத் தொடங்கியுள்ளது.

முந்தைய கொரோனா வைரஸை விட ஒமிக்ரானின் நோய் தாக்கம் குறைவுதான். எனினும்,தடுப்பூசி செலுத்துங்கள் என அன்போடு, பணிவோடு கேட்டு கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.