அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ; சிறுவர்கள் உட்பட 19 பேர் பலி.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 சிறுவர்கள் உட்பட 19 பேர் பலியாகினர்.

தீ விபத்தில் மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

19 மாடிக் கட்டிடத்திலேயே தீ விபத்து ஏற்பட்டது மற்றும் ஒவ்வொரு தளத்திலும் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளில் நியூயோர்க் நகரில் ஏற்பட்ட தீவிபத்தில் இத்தனை பேர் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும்.

Leave A Reply

Your email address will not be published.