பாண்டியன்குளம் விபத்தில் ஒருவர் மரணம்! – மற்றொருவர் படுகாயம்.

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு, பாண்டியன்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்தார்.

அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திர நிக்கசீல என்பவரெ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பாண்டியன்குளம், செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த விமல் விக்னேஷ் என்பவர் படுகாயமடைந்த நிலையில், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

மோட்டார் சைக்கிளும், நெல் வெட்டும் இயந்திரம் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமும் மோதி குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உழவு இயந்திரத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பாண்டியன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.