தெஹிவளை பகுதியில் ஒருவர் கொலை.

தெஹிவளை கல்தேர வீதி பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்

குறித்த சம்பவத்தில் கல்தேர வீதி பகுதியில் வசிக்கும் 18 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்

நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்

அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த நபரை களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்

அதன்படி சந்தேகநபர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

குறித்த சந்தேகநபர்கள் கொலை செய்து விட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.