குவைத்தில் விசா சட்டத்தை மீறிய பலர் கைது.

குவைத் உள்துறை வெளியிட்டுள்ள
செய்தியில் Amghara பகுதியில் நடத்திய பரிசோதனையில் சட்டவிரோதமாக
ஹோம் நர்சிங் வேலை செய்து வந்த 3 ஆசிய நாட்டை சேர்ந்த தொழிலாளர்களை கைது செய்து, போலியான நர்சிங் அலுவலகத்தை கண்டறிந்ததாகவும் மற்றும் இந்த திடீர் பரிசோதனையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விசா சட்டத்தை மீறிய 15 பேரையும் கைது செய்து நாடுகடத்தல் உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட துறைக்கு மாற்றப்படாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உள்துறை அதிகாரிகள் நடத்திய மற்றொரு பரிசோதனையில் 3 போலி பணிப்பெண் அலுவலகங்கள் மற்றும் ஒரு சலூனை உள்ளிட்டவை கண்டறியப்பட்டு 13 பேரை கைது செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.