சரத்குமாரின் 150வது படத்தில் இரண்டு நாயகிகள்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ‘தூங்காவனம்’ மற்றும் ‘கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராஜேஷ் எம்.செல்வா.

இவர் கமல்ஹாசனின் உதவி இயக்குனராவார். இவர் தற்போது சரத்குமார் நடிப்பில் உருவான ‘இரை’ என்ற தொடரை ‘ஆஹா’ என்ற ஒடிடி தளத்திற்காக இயக்கி வெளியிட்டார்.

இந்த நிலையில் இந்த படத்தை தொடர்ந்து தன் 150வது படத்திற்கு தயாராகிவிட்டார் சரத்குமார்.

க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தை ஷ்யாம் – ப்ரவீன் ஜோடி இயக்கவுள்ளனர்.

இதில் அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரனாக நடிக்கிறாராம் சரத்குமார்.
இதில் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கவாஸ்கர் அவினாஷ் இசையமைக்க ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.