ஒட்டுசுட்டான் தான்றோன்றீஸ்வரர் ஆலயத்தில் வடமாகாண மஹா சிவராத்திரி விழா!

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் மற்றும் இந்து கலாசார திணைக்களம் ஆகியன ஒட்டுசுட்டான் தான்றோன்றீஸ்வரர் ஆலய முகாமைத்து சபையுடன் ஒன்றிணைந்து நடாத்தும் வடமாகாண மஹா சிவராத்திரி விழா 2022 நாளை(01) செவ்வாய்க்கிழமை ஆலய முன்றலில் மாலை 7.00மணிக்கு இடம்பெறவுள்ளது.

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்விற்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்கள் பிரதம விருந்தினராகவும், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கே.விமலநாதன் ஆகியோர் சிறப்ப விருந்தினர்களாகவும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ப.ஜெயராணி அவர்கள் கொளரவ விருந்தினராகவும், ஒட்டுசுட்டான் தான்றோன்றீஸ்வரர் ஆலய முகாமைத்தவ சபை தலைவர் சி.கணேசபிள்ளை அவர்கள் இனிய நல்விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் இவ் விழாவில் ஆலய பூஜை வழிபாடு, கலைநிகழ்வுகள், சிறப்புரைகள், ஆன்மீக இசைச்சங்கமம், கௌரவிப்பு நிகழ்வு மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் என்பன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.