ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவதற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கையெழுத்துட்டார்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான படிவத்தில் கையெழுத்திட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா , உக்ரைன் மீது படையெடுத்துள்ள நிலையில், உக்ரைனை ஒரு சிறப்பு நடைமுறையின் கீழ் உடனடியாக அங்கத்துவம் பெற அனுமதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை அவர் கேட்டுக் கொண்டார்.

உக்ரைனை இச் சமயத்தில் , ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர அனுமதிக்கப்பட வேண்டும் என்று 8 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

பல்கேரியா, செக் குடியரசு, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஒரு கூட்டறிக்கையில் இது குறித்து கையெழுத்திட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான கோரிக்கையில் உக்ரைன் ஜனாதிபதி கையெழுத்திட்டதை தொடர்ந்து, உக்ரைனை உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர அனுமதிக்கப்பட வேண்டும் என்று மேற்குறித்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.