கோட்டாபய – ரணில் அரசுக்கு எதிராக கொழும்பில் சஜித் அணி போராட்டம்! (Video)

அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் தற்போது மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒன்றிணைந்த அரசை விரட்டுவோம் எனும் தொனிப்பெருளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் கட்சியின் பெருந்திரளான ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் போராட்டம் காரணமாகக் கொழும்பு – கோட்டைப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பகுதியில் பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.