ஆணை இல்லா மொட்டின் ஊன்றுகோலாக பயன்படுத்தப்படும், பாராளுமன்றத்தை கலைக்கவும்! – சுமந்திரன்

ஆணை இல்லாத பொதுஜன பெரமுண , பாராளுமன்றத்தை ஊன்றுகோலாக பயன்படுத்துகிறது. நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.பி. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் இன்னமும் பொதுஜன பெரமுனவின் பிடியில் உள்ளது, அவர்களுக்கு எந்த ஆணையும் இல்லை.
நான் மீண்டும் சொல்கிறேன், பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.

டலஸ் அழகப்பெருமுக்கு வாக்களிக்கப் போவதாக பகிரங்கமாக அறிவித்த 113 பேருக்கும் அதிகமானோர் இருந்ததாக அநுர திஸாநாயக்க கூறியிருப்பது நல்ல விடயமாகும். அவர்களுக்கு என்ன நடந்தது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.