ஆளும் தரப்பிலிருந்து வெளியோர் புதிய கூட்டணிக்கு வியூகம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்களைக் கொண்ட எதிர்க்கட்சியினர் புதிய கூட்டணியை விரைவில் அமைக்கவுள்ளனர்.

இந்தத் தகவலை முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதைய அரசுடன் நாம் இணைந்து செயற்படப்போவதில்லை. அரசின் சில பதவிகளுக்காக எதிர்க்கட்சியில் சிலருக்கு அழைப்புக் கிடைத்துள்ளது. எவ்வாறெனினும் எமது தரப்பினருக்கு அதற்கான அழைப்பு எதுவும் கிடைக்கவில்லை.

அவ்வாறு அழைப்புக் கிடைத்தாலும் அரசின் எந்தவொரு பதவியையும் பொறுப்பேற்கப்போவதில்லை.

ஆளும் கட்சிக் கூட்டத்துக்குச் சமூகமளிக்கவில்லையா? எனச் சிலர் எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர். நாம் எதிர்க்கட்சியிலேயே உள்ளதால் ஆளும் கட்சிக் கூட்டத்துக்குச் சமூகமளிப்பது எப்படி? நாம் ஆளும் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.