குழந்தை தலையில் மாட்டிய பானை; போராடி அகற்றம்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிய அலுமினிய பாத்திரத்தை தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி அகற்றினர்.

பரமக்குடி அருகே கிளாக்குளம் பழனிச்சாமி மகன் அஜித். ஒன்றரை வயது குழந்தை அஜித் வீட்டில் விளையாடிய போது சிறிய அலுமினிய சமையல் பாத்திரத்திற்குள் தலை சிக்கியது. பாத்திரத்தின் வாய் பகுதி அகலம் சிறியதாக இருந்ததால் தலையை வெளியே எடுக்க முடியவில்லை.குழந்தையின் அழுகுரல் கேட்டு தாய் வனிதா வந்து பார்த்த போது பதறினார்.

பானையை எடுக்க முடியாததால் பரமக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு குழந்தையை கொண்டு சென்றனர். நிலைய அலுவலர்கள் ராஜேந்திரன், ரமேஷ் உள்ளிட்ட வீரர்கள் முயன்றும் முடியவில்லை.

அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் பாத்திரத்தை வெட்டி அகற்றினர். காயம் இன்றி குழந்தையை மீட்ட தீயணைப்பு வீரர்களை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.