குருந்தூர் மலைப் பகுதியில் மக்கள் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு! – சார்ள்ஸ் எம்.பி. நேரில் விஜயம்.

குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்களைத் தொல்பொருள் திணைக்களத்தினர் கடந்த வாரம் சுவீகரித்துள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலாதனுக்கு அப்பகுதி மக்கள் எடுத்துக் கூறியதன் பிரகாரம் அப்பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயம் செய்து தொல்பொருள் திணைக்களத்தினர் சுவீகரித்துள்ள காணிகளைப் பார்வையிட்டார்.

உடனடியாகச் சம்பந்தப்பட்ட அமைச்சரைத் தொடர்புகொண்ட சார்ள்ஸ் எம்.பி., புதிதாக தொல்பொருள் திணைக்களத்தினர் மக்களின் விவசாய நிலங்களைச் சுவீகரித்துள்ளனர் எனவும், இதனால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரியப்படுத்தினார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இப்படியான செயற்பாடுகள் தொடர்ந்தும் மக்களை வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் எனவும் அமைச்சருக்குச் சார்ள்ஸ் எம்.பி. தெளிவுபடுத்தினார்.

இது தொட‌ர்பாக உடனடியாகத் தான் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.