பஸ்ஸில் யுவதியைப் பிளேட்டால் வெட்டிய இளைஞர் மடக்கிப் பிடிப்பு!

பஸ்ஸில் இளம் பெண்ணைப் பிளேட்டால் வெட்டிக் காயப்படுத்திய இளைஞரை பஸ்ஸில் பயணித்த சக பயணிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று வவுனியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸில் சன நெரிசலில் குறித்த இளைஞர் தனக்கு முன்னால் நின்ற யுவதியைப் பிளேட்டால் வெட்டியுள்ளார்.

காயத்துக்குள்ளான யுவதி சத்தமிடவே சக பயணிகள் சுதாகரித்துப் பிளேட்டால் வெட்டிய இளைஞரை பஸ்ஸுக்குள் மடக்கிப் பிடித்தனர்.

குறித்த இளைஞர் யாழ்., எழுதுமட்டுவாழ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.