போராட்டக்களத்தில் ஒன்றுகூடும் போராட்டக்காரர்கள்!!

கொழும்பு – மருதானை எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு முன்பாக ஆரம்பமாகவுள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்வதற்காக தயாசிறி ஜயசேகர, பைசர் முஸ்தபா உள்ளிட்டோர் அப்பகுதிக்கு வந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அங்கு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் ஆகியோர் திரண்டுள்ளனர்.

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக இன்றைய தினம் பாரிய போராட்டமொன்றை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அம்பேபுஸ்ஸ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொழும்பிற்கு வந்துள்ள மக்கள் மருதானையில் ஒன்றுகூடியுள்ளனர்.

இவ்வாறானதொரு சூழலில் கொழும்பின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.