பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. எஸ். எம். எம். முஷாரப் அவரளுக்கு பாராட்டு விழா

பொத்துவில் கல்விக் கோட்டத்தின் பாடசாலைகளின் அதிபர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. எஸ். எம். எம். முஷாரப் அவர்களை பாராட்டும் விழா 5/9/2020 அன்று, பொத்துவில் ஹேங்லூவ்ஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வை அதிபர் சங்கத்தின் தலைவரும், பொத்துவில் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபருமாகிய, ஜனாப். கே. ஹம்ஸா அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.

நிகழ்வில், பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர், எம். ஏ. புஹாரி அவர்களால், பாராளுமன்ற உறுப்பினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் வாழ்த்துரையுமி நிகழ்த்தப்பட்டது. அத்தோடு, அதிபர் சங்கதத்தினால், வாழ்த்துப்பா பாடப்பட்டு, அது நினைவுச் சின்னமாகவும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொத்துவில் கல்விக் கோட்டத்தின் பாடசாலை அதிபர்கள் கலந்து சிறப்பித்தனர்.

– Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.