மின்னல் தாக்கி பாடசாலை மாணவன் பரிதாப மரணம்!

பாடசாலை மாணவன் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை மாவட்டம், ஹொரணை – அங்குருவாதொட்ட பிரதேசத்தில் நேற்று (22) இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 15 வயதுடைய மாணவனே பலியாகியுள்ளார்.

இதேவேளை, சீரற்ற காலநிலையால் பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் 5 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.