கிராம உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்புக்கான நேர்காணல் அடுத்த வாரம் ஆரம்பம்!

புதிய கிராம உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்புக்கான நேர்காணல் அடுத்த வாரம் தொடங்கும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, புதிதாக 2,100 கிராம உத்தியோகத்தர்களை அரசுப் பணியில் சேர்த்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற கிராம உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு தொடர்பான போட்டிப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.